Wednesday 3 June 2015

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.21,000 வழங்கப்படும்.
இந்தப்பணிக்கு பட்டதாரி அல்லது முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியலாளர், சமூகப்பணி, சமுகவியல்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொழில், கல்வி, சமூக நலம், குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றியல் மூன்று வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
எனவே தகுதியுள்ள நபர்கள் புகைப்படத்துன் வரும் 15-ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 113, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பிட வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment